அவர் எழுத்தில் கலந்திருக்கும் நகைச்சுவையும் satireஉம் என்னை வியக்க வைக்கும். எப்படி இந்த மனுஷனால் இந்த விஷயத்தை இது போன்ற வார்த்தைகளால் வர்ணிக்க முடிகிறது என்று பலமுறை யோசித்திருக்கிறேன். எந்த ஒரு கேள்விக்கும் மிக சாதுர்யமாக பதிலளிக்கும் லாகவம் என்னைக் கவர்ந்தது. அவருடைய சமூகக் கட்டுரைகள் என்னை பிரமிக்க வைத்தன. உதாரணம்: "கடவுள்களின் பள்ளத்தாக்கு". இதைப் பற்றி மற்றொரு வலைப்பதிவில் விவாதிக்கிறேன்.
தமிழ் கற்று வரும் என் 10 வயது மகளிடம் சுஜாதாவின் படத்தைக் காட்டி, " இவர் போல ஒரு genius பார்க்க முடியாது" என்று நான் சொன்ன அதே நாளில் அகஸ்மாத்தாக அவர் காலமானார்.
சுஜாதா - நீங்கள், என் போன்ற வாசகர்களுக்கு விட்டுச் சென்ற இலக்கியச் செல்வங்கள் ஏராளம். உம்மைக் கண்டு மரியாதையோடு வியக்கிறேன்.
சுஜாதா புகைப்படம் - lazygeek.net குரு சுப்ரமணியத்திற்கு நன்றி.
No comments:
Post a Comment