2/10/09

கனவுகளே...

பகற்கனவு காண்பது தவறு என்பது அன்று முதல் இன்று வரை நிலவும் தப்பான கருத்தாகும். கனவு இல்லையெனில் கற்பனை இல்லை: கற்பனை இல்லை எனில் முயற்சி இல்லை; முயற்சி இல்லை எனில் புதுமை இல்லை. புதுமையும் முயற்சியும் இல்லை எனில் முன்னேற்றம் இல்லை என்பது என் கருத்து. குழந்தைகளை நாம் கனவு காண விடுவதே இல்லை. ஒருங்கிணைக்கப்பட்ட தினசரி கடமைகளால் (daily organized tasks) கனவுகள் உருவாகாமல் அழிக்கப்படுகின்றன. நான் இளமைப் பிராயத்தில் கல்லாததை எல்லாம் என் குழந்தை கற்க வேண்டும் என்ற பேரார்வத்தில் கனவு காணும் நேரத்தை நாம் கவலையின்றி காற்றில் விடுகிறோம். பகற்கனவு காண முடியவில்லை எனில் என் வாழ்க்கை நரகம்.

அப்படி ஒரு கனவில் முழ்கி இருந்த ஒரு பெண்ணின் படம் தான் இங்கு உள்ளது. மைசூரில் எதோ ஒரு பெயர் மறந்த தெருவில் காய்கறி விற்கும் இவள் மனதில் ஓடும் எண்ணங்கள்தான் என்ன? வாழ்க்கை, வறுமை, படிப்பு, பசி, சினிமா, சிநேகிதிகள் - இவற்றில் ஏதாவது ஒன்றாவது அவள் மனத்திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் என்பது என் கணிப்பு.

நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன் நான் எடுத்த இந்த படம் என் நினைவை விட்டு அகலாத ஒன்றாகும்.

8/8/08

குசேலன்


கவிதாலயாவின் குசேலன் பார்த்தேன். மலையாளத்தில் முதலில் வந்த படத்தின் மூலக்கதை தெரியாது. தமிழ்படுத்தியதில் பல கோலிவுட் மாற்றங்கள் இருப்பதாகப் பட்டது. இது ரஜினி படம் அல்ல. சில நிமிடங்கள் வந்து போகும் ரஜினிக்கு என் இவ்வளவு தாரை தப்பட்டம் என்று தெரியவில்லை. வசனங்கள் மூலமாக தன்னை தானே தூக்கி வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்றும் தெரியவில்லை.

பசுபதி நன்றாகத்தான் நடிக்கிறார். ரஜினிக்கு பக்கவாத்தியமாக இருப்பதனாலோ என்னவோ படம் பூராவும் கடுப்பான முகத்தோடு வலம் வருகிறார். வெயில் படத்தில் எவ்வளவோ better range of acting இருந்தது. பல நடிகர்களும் நடிகைகளும் படம் முழுவதும் வந்து போகிறார்கள். வடிவேலு தன் நகைச்சுவை strategy மாற்ற வேண்டியது அவசியம். தாங்க முடியவில்லை சாமி!
என்னதான் ரஜினி, படத்தின் கடைசி 20 நிமிடங்களில் உணர்ச்சிகரமாக நடித்தாலும், தர்மதுரை, 6-60 வரை போன்றவற்றில் காட்டிய திறமை இதில் இல்லை என்பதே உண்மை. இவ்வளவு பெரிய படம் கிடைத்தும் G.V.Prakash இசையில் சொதப்பி தள்ளியிருக்கிறார். ஒளிப்பதிவு மட்டும் தரம்.

அரைவேக்காடு .

7/9/08

கடற்கரை படங்கள்

அலபாமா கரையோரம் நான் எடுத்த சில புகைப்படங்கள்.








4/25/08

அங்கே வருவது யாரோ

"நேற்று இன்று நாளை" படத்தில் எம் ஜி ஆர் மற்றும் மஞ்சுளா படிய அற்புதமான பாடல். MSV இசையும், SPB குரலும் இந்த பாட்டை மறக்க முடியாதபடி செய்தன. ஹீரோ, ஹீரோயின் உடைகளில் 70's இன் கோமாளித்தனம் இருந்தாலும் இந்தபாடல் மிக இனிமையானது. 5 அல்லது 6 வது வகுப்பு படிக்கும்போது அடிக்கடி ரேடியோவில் கேட்டு மூளையில் நிரந்திரமாக பதிவான பாடல் இது. பலருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் இந்த படத்தைத் தயாரித்தது நடிகர் S.A.அசோகன்!

Ange Varuvadhu Yaaro
Uploaded by Singasongoflove. - Parties, dorm life, and other college videos.

மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் நான் எடுத்த படங்கள் சில.

ரஜினியின் பேச்சு

கர்நாடகா கண்டனக் கூட்டத்தில் ரஜினியின் பேச்சு.

தமிழ் பழமொழிகள்

என்னைக் கவர்ந்த தமிழ் பழமொழிகள் சில.
  • கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
  • காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கணும்.
  • பாம்பு கடிச்சி படக்குன்னு போக.
  • ஒரு கண்ணுல வெண்ணை மறு கண்ணுல சுண்ணாம்பு.
  • மாமி்யார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம்.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
  • கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு.
  • அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
  • ஆழாக்கு அரிசி, மூளாக்கு பானை, முதலியார் வருகிற வீராப்பை பாரும்.
  • ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்.
  • அருக்கமாட்டாதான் கையில் 58 அருவாளாம்.
  • மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்.

நன்றி: பசுபதி பிள்ளை , Wikiquote - Tamil proverbs.

4/2/08

பாஷைக்கு அடிமைகள்

"எனக்குத் தெரிந்த பாஷைகளில் தமிழ் பாஷையைப்போல் இனிமையானது எங்கும் இல்லை" என்று சொல்கிறார் பாரதியார். பாரதியாருக்கு எத்தனை பாஷை தெரிந்திருந்தது என்பது முதல் கேள்வி, அதிகமாய் சொன்னாலும், நான்கு ஐந்து பாஷைகளுக்கு மேல் தெரிந்திருக்க நியாயமில்லை. கதையில் கிணற்றுத் தவளை சொல்லிற்று;- " நான் பார்த்தவற்றிலே இந்த கிணற்றைவிட பெரிய சமுத்ரம் எதுவும் கிடையாது" என்று.
'பாஷைக்கு அடிமைகள்' என்ற கல்கியின் கட்டுரையிலிருந்து. விகடன் 1.9.32

உதைப்பேன்!

"திருப்பதி கோயில்லே
மாலை மாற்றி தாலி கட்ட நான் ஸ்பெஷல் பெர்மிஷுன் வாங்கி வச்சிருந்தேன்... அங்கே பத்திரிக்கைக்கரர்களும் ரசிகர்களும் வந்தது கூட்டம் சேர்ந்துட்டா என் பெயர் கேட்டு விடுமோன்னு அஞ்சினேன்... இதையெல்லாம் calculate பண்ணித்தான் பத்திரிக்கை நண்பர்களிடம் பேசறச்சே, 'திருப்பதிக்கு காமேராவோட வந்து போட்டோ எல்லாம் எடுக்காதீங்க..'ன்னு ரிக்வெஸ்ட் பண்ணிக் கேட்டுக்கிட்டேன்...

'வந்தா' ன்னு ஒரு பிரஸ் நண்பர் கேட்டார். 'உதைப்பேன்' ன்னு சொன்னேன்... உடனே இன்னொருத்தர் சொன்னார், 'அந்த மாதிரி வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணாதீங்க... அதை நாங்க பப்ளிஷ் செய்துட்டா, பின்னால அசிங்கமா போயிடும்' ன்னு .. அந்த மாதிரி நேருக்கு நேர் தவறைச் சுட்டிக்காட்டினப்போ ஐ வாஸ் வெரி ஹாப்பி... உடனே 'சாரி' சொன்னேன்.

கூடவே, 'இப்போ சாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க...காமிராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கறதை தவிர எனக்கு வேற வழி தோணாது' ன்னும் சொன்னேன்... பிகாஸ், ஆண்டவனுக்கும் மனசாட்சிக்கும் தவிர வேறு யாருக்கும் நான் பயப்படறதில்லே... அதோட, நான் ஒண்ணு நினைச்சுட்டேன்னா அது எனக்கு நடந்தே தீரணும்..."

-திருமணத்தின் போது நடந்த கலாட்டா பற்றி ரஜினி ...
விகடன் 22.3.81

3/31/08

தமிழ் மொழி கொலைகள்

தமிழ் மொழியில் ஸ்பஷ்டமாக உச்சரித்துப் பாட பாடகர்களே இல்லையா? அல்லது நம் இசையமைப்பாளர்கள் தற்கால நாகரீகத்திற்கு அடிவணங்கி தமிழ் கொலையை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள? அப்படி என்ன ஒரு கவனக்குறைவு?

"னா"விற்கும் "ணா" விற்கும் வித்தியாசம் தெரியாத பாடகர்களை studioவிற்குள் விடாதீர்கள். உதித் நாராயணன், ஷ்ரேயா Goshal, மதுஸ்ரீ போன்றவர்களின் குரல் இனிமையை இருந்தாலும், உச்சரிப்பு சகிக்கவில்லை. "உனக்குல் நானே" என்று மதுஸ்ரீ படும்போது தலையில் "மடெர்" என்று போடலாம் போல இருக்கிறது.

SPB, யேசுதாஸ், உன்னிகிருஷ்ணன், கார்த்திக், உன்னிமேநோன், சுஜாதா போன்றோர் எல்லாம் உயிரோடுதானே இருக்கிறார்கள்? Producer, Director இவர்களுக்கு அறிவு இல்லை என்றால் இசையமைப்பாளருக்கு எங்கே போச்சு? தமிழை கடித்து குதரும்போது கேட்க மாட்டீர்களா? அதைத் திருத்திக் கொடுத்தால் என்ன கேடு? அது சரி, அவனவன் பறந்து வந்து 3 track பாடிவிட்டு அடுத்த flight பிடிக்க செல்லும்போது இதற்கெல்லாம் நேரம் எது? Quantity கூடக் கூட quality குறையத்தானே செய்யும். அழகில் ரீமிக்ஸ் வேறு இடையில் புகுந்து இருக்கிற கொஞ்ச நஞ்ச தமிழையும் த்வம்சம் செய்து விட்டு போகிறது. சரக்கு இல்லை என்றால் மூடிட்டு போறதுதானே. இந்த மாதிரி தரங்கெட்ட பாடல்களை கொடுப்பதும், மற்றவர்களின் பாடல்களை ரீமிக்ஸ் செய்வதும் வேட்கத்திற்குரிய விஷயமாகும். திருந்துங்கள். தமிழைக் காப்பாற்றுங்கள்.