3/31/08

தமிழ் மொழி கொலைகள்

தமிழ் மொழியில் ஸ்பஷ்டமாக உச்சரித்துப் பாட பாடகர்களே இல்லையா? அல்லது நம் இசையமைப்பாளர்கள் தற்கால நாகரீகத்திற்கு அடிவணங்கி தமிழ் கொலையை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள? அப்படி என்ன ஒரு கவனக்குறைவு?

"னா"விற்கும் "ணா" விற்கும் வித்தியாசம் தெரியாத பாடகர்களை studioவிற்குள் விடாதீர்கள். உதித் நாராயணன், ஷ்ரேயா Goshal, மதுஸ்ரீ போன்றவர்களின் குரல் இனிமையை இருந்தாலும், உச்சரிப்பு சகிக்கவில்லை. "உனக்குல் நானே" என்று மதுஸ்ரீ படும்போது தலையில் "மடெர்" என்று போடலாம் போல இருக்கிறது.

SPB, யேசுதாஸ், உன்னிகிருஷ்ணன், கார்த்திக், உன்னிமேநோன், சுஜாதா போன்றோர் எல்லாம் உயிரோடுதானே இருக்கிறார்கள்? Producer, Director இவர்களுக்கு அறிவு இல்லை என்றால் இசையமைப்பாளருக்கு எங்கே போச்சு? தமிழை கடித்து குதரும்போது கேட்க மாட்டீர்களா? அதைத் திருத்திக் கொடுத்தால் என்ன கேடு? அது சரி, அவனவன் பறந்து வந்து 3 track பாடிவிட்டு அடுத்த flight பிடிக்க செல்லும்போது இதற்கெல்லாம் நேரம் எது? Quantity கூடக் கூட quality குறையத்தானே செய்யும். அழகில் ரீமிக்ஸ் வேறு இடையில் புகுந்து இருக்கிற கொஞ்ச நஞ்ச தமிழையும் த்வம்சம் செய்து விட்டு போகிறது. சரக்கு இல்லை என்றால் மூடிட்டு போறதுதானே. இந்த மாதிரி தரங்கெட்ட பாடல்களை கொடுப்பதும், மற்றவர்களின் பாடல்களை ரீமிக்ஸ் செய்வதும் வேட்கத்திற்குரிய விஷயமாகும். திருந்துங்கள். தமிழைக் காப்பாற்றுங்கள்.

No comments: