3/13/08

மூச்சு நின்றாலும், பேச்சு நிற்காது

வர வர பேச்சு அதிகமாகிவிட்டது. எங்கும் பேச்சு, எதிலும் பேச்சு, எப்போதும் பேச்சு. செல்போன் வரவு இதை எட்டு மடங்கு ஆகி விட்டது. முக்கியமான விஷயமாக இருந்தால் பேசு, இல்லையேல் மூடு. Essential communication என்பதே காணமல் போய்விட்டது. பேச வேண்டாம் என்று சொல்லவில்லை. அவசியமான விஷயங்களை பேஷாக பேசு. இப்போது என்ன சாப்பிட்டு கொண்டு இருக்கிறாய், எங்கே ஷாப்பிங் சென்றாய், அவங்க வீட்டு சங்கதி தெரியுமா போன்ற விஷயங்கள் உனக்கும் இந்த நாட்டிற்கும் தேவை இல்லை. அந்த நேரத்தில் நல்ல புத்தகம் படி, ஜன்னல் வழியே பார், ஒரு நடை நடந்து விட்டு வா, குட்டி தூக்கம் போடு, அல்லது குழந்தையுடன் எதாவது செய். எதுவும் தொதாகவில்லை என்றால், மௌனத்தை கடைபிடி.

இந்த செல்போன் என்பது ஒரு இருமுனை கூர்வாள் போன்றது, சனியனால் உதவியும் உண்டு, பெருத்த உபத்ரவமும் உண்டு. Anonymity என்பதே ஒழிந்து போனது. என் சுவடு யாருக்கும் 24/7 தெரிய தேவையில்லை. பேசக்கூடாத இடங்களில் எல்லாம் செல்போனில் பேசுவது போன்ற அநாகரீகம் எதுவும் இல்லை. பக்கத்தில் இருப்பவருக்கு தன்னுடைய உதவாக்கரை பேச்சு அசௌகரியம் ஏற்படுத்தும் என்ற பிரக்ஞை இல்லாதவர்களை நாடு கடத்த வேண்டும். இந்த ஜன்மங்களால் செல்போன் கம்பெனி தவிர யாருக்கும் பிரயோஜனம் இல்லை. டாக்டர் ஆபீஸ், சினிமா அரங்கம், மருத்துவமனை, கோவில்கள், லைப்ரரி போன்ற இடங்களில் செல்போன் ஒலித்தால் அதை பறிமுதல் செய்து செருப்பால் அடிக்க வேண்டும் (போன் + owner).

மக்கள் தாம் பேசுவதை தாமே கேட்க ஆரம்பித்தால் பேச்சு தானாக குறையும் - யாரோ.

No comments: