3/31/08

ஏன் புகைப்படம்?

நானும் ஒரு புகைப்படக் கலைஞன். புகைப்படம் எடுப்பதில் ஒருவருக்கு அப்படி என்னதான் ஒரு ஆர்வம் என்று சிந்தித்தேன். நிரந்திரமாக மறைந்து போன அந்த க்ஷணத்தைப் பதிவு செய்யும் திமிறா, எங்கே இந்த காட்சியை விட்டு விடப் போகிறோமோ என்ற பயமா, இந்த காட்சியை என்னால் அழகாகக் காட்ட முடியும் என்ற நம்பிக்கையா அல்லது இந்த காட்சியை என் கண் இப்படித்தான் பார்த்தது என்ற கலை கர்வமா, தெரியவில்லை. எடுத்த படங்களை பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷம், நிறைவு, பெருமை ஆகியவை மற்ற கருத்துக்களைப் பின்னுக்கு தள்ளி விடுவது நிஜம்.
சிலருக்கு புகைப்படம் (இனி படம் என்றே கூறுவேன், ஏனெனில் டிஜிட்டல் புகைப்படம் என்று ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை!) எடுப்பது தொழிலாக இருந்தாலும் பலருக்கு அது ஒரு பொழுதுபோக்காகவும், ஒரு சிலருக்கு அது ஒரு passion ஆகவும் இருக்கிறது. டிஜிட்டல் கேமரா வந்த பின் படம் பிடிக்காதவர்களே இல்லை போல் தெரிகிறது. இது வரவேற்கத்தக்க மாற்றம்தான். எனினும் எடுக்கும் படங்களை ஓரளவு விவேகத்தோடு, பார்த்துவிட்டு துப்பாமல் இருப்பது போல் எடுத்தால் பலருக்கு நன்மை. எல்லாரும், கண்ணில் ஒற்றிகொள்ளும் அளவிற்கு கலைநயத்தோடு படம் எடுக்க முடியாது என்பது தெரியும். ஆனால் ஒன்றிரண்டு சிறிய அணுகுமுறைகளையாவது கற்றுக்கொள்வது படம் பார்பவர்களின் உயிரைக் காப்பாற்றும்!

கண் கவரும் படங்களைச் சுடுவது ஒன்றும் பிரம்ம சூத்ரம் இல்லை. அவனவன் கண்ணோட்டத்தில்தான் விஷயமே இருக்கிறது. ஒரே காட்சியை நன்றாகவும் கண்ராவியாகவும் எளிதில் எடுக்கலாம். படம் எடுக்கும் பொது கையாளும் பொறுமையும், சிரத்தையும், கொஞ்சம் கலை உணர்வும் ஒரு படத்தை நல்ல படத்திலிருந்து அருமையான படத்திற்கு கொண்டு செல்லும். படங்கள் பற்றி மீண்டும் இன்னொரு பதிவில்...

நான் சுட்ட சில படங்கள் இங்கே... இவை என் கண்ணோட்டத்தில் சிறப்பாகத் தோன்றினாலும் காண்போருக்கு விமர்சிக்கும் உரிமை உண்டு. இவை டுபாகூர் படங்கள் போல தோன்றவில்லை என்றால் மேலும் சிலவற்றைக் காண போகவேண்டிய முகவரி http://www.digitaldreamz.us/ (என் ஆஸ்தான வலைத்தளம்!).

By the way, புகைப்படம் என்ற பெயர் எப்படி வந்தது? தெரிந்தால் விளியுங்கள்.


No comments: