- கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
- காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கணும்.
- பாம்பு கடிச்சி படக்குன்னு போக.
- ஒரு கண்ணுல வெண்ணை மறு கண்ணுல சுண்ணாம்பு.
- மாமி்யார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம்.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
- கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு.
- அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
- ஆழாக்கு அரிசி, மூளாக்கு பானை, முதலியார் வருகிற வீராப்பை பாரும்.
- ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்.
- அருக்கமாட்டாதான் கையில் 58 அருவாளாம்.
- மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்.
நன்றி: பசுபதி பிள்ளை , Wikiquote - Tamil proverbs.
No comments:
Post a Comment