2/6/08

இந்த புலிகள் பசித்தால் புல்லையும் தின்னும்


அயல்நாட்டு தமிழர்களின் தமிழ் தாகம் தணிக்க சன் டிவி வந்தது. ஆனால் இந்த தமிழ் மெகா சீரியல்களின் இம்சையை மட்டும் தாங்க முடியவில்லை. எவ்வளவு பேர் நக்கல் பண்ணினாலும் விடாமுயற்சியுடன் புதிய சீரியல்கள் வரக் காரணம் என்ன?அதைப் பார்த்து ரசிக்கும் பரதேசிகள்தான்! (pun intended)

இந்த juvenile அவலங்களைப் பார்பதோடு இல்லாமல் அதைப் பெருமையாக பார்ட்டிகளில் அலசி விமர்சிக்கும் பெருசுகளை நினைத்து தலையால் அடித்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய? நல்ல திரைப்படங்களை (வெயில், பருத்தி வீரன், குருதிப்புனல், மஹாநதி, மொழி போன்றவை) ரசித்துப் பார்த்து ஊக்குவிக்க வக்கில்லாதவர்கள், இந்த தமிழ் சீரியல்களை விரும்பிப் பார்ப்பதுதான் தமிழ் சினிமாவிற்கு சாவு மணி.

இந்த புலிகள் பசித்தால் புல்லையும் தின்னும்...

No comments: